குற்றமற்றவரெனில் எதற்காக உண்ணாவிரதம்?
“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுரேஷ் சலேவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,
“சஹ்ரான் குழுவினருக்கு எவரேனும் உதவி இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடரவேண்டும். சூத்திரதாரிகள் யாரென்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். உரிய வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தான் குற்றமற்றவர் எனில் சுரேஷ் சலே அஞ்சவேண்டியதில்லை. நீதிமன்றத்துக்கு சென்று தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இதைத்தான் அவர் செய்ய வேண்டும். அதனைவிடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது பயனற்ற விடயமாகும்.
சுரேஷ் சலே, புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்தபோது ரிஷாட் பதியுதீன் உட்பட சிலரை கைது செய்து, அவர்கள்தான் சூத்திரதாரியெனன் கூறமுயன்றார்.
அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. நீதிமன்றம்சென்று, சட்டத்தரணிகள் ஊடாக தாம் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபித்தனர்.” – என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 12, 2026
Rating:

கருத்துகள் இல்லை: