Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜப்பானில் பரவி வரும் நொய் குறித்து .இலங்கையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை....

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய ஒருவகை கொடிய வகை பக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையில் வீண் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் பதில் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது புதிய வகை பக்டீரியாவோ, புதிய நோயோ அல்ல. ஏற்கனவே சமூகத்தில் உள்ள ஸ்ட்ரெப்டோகொக்கல் (Streptococcal) என்ற பக்டீரியா மூலமாக இந்த நோய் பரவி வருகிறது.

இந்த பக்டீரியாவின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானோருக்கு இந்த நோய் அறிகுறி மிகவும் அரிதாக ஏற்படக்கூடும்.

இதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இது தீவிரமாக பரவக்கூடியது அல்ல. இலங்கையில் இது தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை” என சுகாதார அமைச்சின் பதில் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் பரவி வரும் நொய் குறித்து .இலங்கையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.... Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 20, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.