1990 சுவசெரிய அறக்கட்டளையின் 10 ஆண்டுகால சேவையை முன்னிட்டு முதலாவது இரத்ததான முகாம்
பல உயிர்களைப் பாதுகாக்கும் 1990 சுவசெரிய அறக்கட்டளையின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முதலாவது இரத்ததான முகாம் அண்மையில் ஹோட்டன் பிளேஸில் உள்ள பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
"உயிர்களைக் காப்பாற்றும் சேவையின் மூலம் மேலும் பல உயிர்களைப் பாதுகாப்போம்" எனும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் முன்வந்து இரத்தம் வழங்கினர். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிரோஷன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1990 சுவசெரிய என்பது நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் இயங்கும், இலங்கையில் நோயாளர்களை முற்றிலும் இலவசமாக அழைத்துச் செல்லும் அவசர அம்பியூலன்ஸ் சேவையாகும். ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தொடங்கப்பட்டு, தற்போது இலங்கை அரசாங்கத்தால் இது நடத்தப்படுகிறது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 28, 2026
Rating:

கருத்துகள் இல்லை: