காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளனர்
(எம். எச். எம் .அன்வர்)
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற பெட்மின்ரன் போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று 1.7.2019 பாடசாலையில் அதிபர் ஏ எல். சப்ரி தலைமையில் இடம்பெற்றது
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் .எம்.எம். எஸ். .உமர் மௌலானா கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
மேற்படி நிகழ்வில் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதேச கல்விப்பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளனர்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 02, 2019
Rating:
கருத்துகள் இல்லை: