ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி தளவைத்தியசாலைக்கு பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டி வழங்கிவைக்கப்பட்டது.
முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி தளவைத்தியசாலைக்கு பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டி வழங்கிவைக்கப்பட்டது.
காத்தான்குடி தளவைத்தியசாலை A தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டும் அதனுடைய ஆளணி மற்றும் பௌதீகவளங்கள் போதியளவு நிவர்த்திசெய்யப்படவில்லை என்பது தொடர்ச்சியான ஒரு பிரச்சினையாக இருந்துவருகின்றது.
மிக அதிகமான நோயாளிகளை பராமரிப்பு
செய்யும் காத்தான்குடி தளவைத்தசாலையில் போதிய வசதியின்மை காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கு நோயாளிகளை கொண்டுசெல்வதற்காக சேவைக்கு உகந்த நிலையில் ஒரேயொரு அம்பியூலன்ஸ் வண்டிமாத்திரமே உள்ள நிலையில் நோயாளிகளை உரிய நேரத்திற்கு ஏனைய வைத்தியசாலைக்கு இடமாற்றம்செய்வதில் பாரிய பிரச்சினையை வைத்தியசாலை நிர்வாகம் முகம்கொடுத்துவருகின்றது.
அவ்வாறே சத்திரசிகிச்சை செய்யப்படும் மற்றும் நடக்கமுடியாதளவிலான நோயாளிகளை முதலாம் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டுசெல்வதிலும் பாரிய அசௌகரியங்கள நோயாளிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் வைத்தியசாலையின் மிகப்பிரதான தேவையாக காணப்படும் நோயாளிகளை முதலாம் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டுசெல்வதற்கான மின் உயர்த்தி (Elevator) மற்றும் அம்பியூலன்ஸ் வண்டி என்பன முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பைசல் காசிம் அவர்களிடம் தொடரேற்சியாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மின் உயர்த்திக்கு தேவையான ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட இருக்கும் நிலையில் (09.08.2019 வெள்ளி) சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பைசல் காசிமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் அவர்களும் கலந்துகொண்டு சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது அம்பியூலன்ஸ் வண்டிக்கான திறப்புக்கள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி தளவைத்தியசால வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஜாபிர் அவர்களிடமும் கையழிக்கப்பட்டது.
இதன்போது ஷிப்லி பாறூக் அவர்கள் அமைச்சரை அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்து காத்தான்குடி தள வைத்தியசாலை A தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளபோதிலும் அதனுடைய ஆளணிப்பற்றாக்குறை மற்றும் ஏனைய பௌதிகவளங்கள் தேவைப்பாடுகள் இன்னும் A தர வைத்தியசாலைக்கு ஏற்றாற்போல் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இது சம்பந்தமாக மிக விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்
இன்னிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களும் கௌரவ அதிதியாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பைசல் காசிம், மற்றும் பா. உ. எம். எஸ். தௌபீக் அவர்களும் ஏனைய அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏனைய வைத்தியசாலை பொறுப்பதிகாரிகள்என பலரும் கலந்துகொண்டனர்.
ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி தளவைத்தியசாலைக்கு பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டி வழங்கிவைக்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 10, 2019
Rating:

கருத்துகள் இல்லை: