Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தென் மாகாண ஊடகவியலாளர் குழு காத்தான்குடி வருகை..


(எம்.பஹ்த் ஜுனைட்)
ஏப்ரல் 21 தற்கொலைத்தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிலவரங்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கும்  நோக்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தலைமையில் ஊடகவியலாளர் செந்தில் சிவஞானம் ( தேவசரண ஒன்றியம்), உதய களு பத்திரன( சுதந்திர ஊடகவியலாளர்) ஆகியோர் உள்ளடக்கிய ஊடகக் குழுவினர் புதன்கிழமை (14) காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தனர்.


மேற்படி விஜயத்தின் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜம் இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் அதனைத்தொடர்ந்து காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டனர்.


மேற்படி கலந்துரையாடலில் ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் காத்தான்குடி சமூகம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஏப்ரல் 21 தாக்குதலைக் காத்தான்குடி முஸ்லிம்கள் கண்டிப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது..


தென் மாகாண ஊடகவியலாளர் குழு காத்தான்குடி வருகை.. Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 15, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.