யாழ் வீரசிங்க மண்டபத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி
யாழ் வீரசிங்க மண்டபத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 20, 2019
Rating:

எதிர்வரும் ஆகஸ்ட் 27ந்திகதி தொடங்கிச் செப்டம்பர் முதலாம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறப் போகும் புத்தகக் கண்காட்சியில் அமையப் பெறும் கொடகேயின் 10ம் இலக்க விற்பனைக் கூடத்தில், புத்தகக் கண்காட்சி அங்குரார்ப்பண தினமான 27.08..2019 அன்று, காலை 9.00 மணிக்கு நிறுவனத்தின் பின்வரும் புதிய தமிழ் நூல்கள் வெளியிட்டு வைக்கப்படும்.
நந்தினி சேவியரின் "பிடித்த சிறுகதை" (முகநூல் தொடர்)
மலரன்பனின் "பால்வனங்களில்" (நாவல்)
க.கோபாலபிள்ளையின் "அசை" (சிறுகதை)
மேமன்கவியின் "பிரதிகளைப் பற்றிய பிரதிகள்" (விமர்சனம்)
கவிதாயினி ஷியாவின் "வலித்திடினும் சலிக்கவில்லை" (கவிதை)
கொடகே புத்தக நிறுவனத்தின் நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே அவர்களின் முன்னிலையில், வட மாகாண கெளரவ ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் அவர்கள் வெளியிட்டு வைக்கும் மேற்படி நூல்களின் முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்று கொள்வார்.
2025 ஆம் ஆண்டு ஈத் அல்-அழ்ஹா பெருநாளை முன்னிட்டு, இரண்டு புனித பள்ளிவாயில்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் மற்றும...
கருத்துகள் இல்லை: