இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வெசக் செய்தி
இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது.
கடுமையான அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் பௌத்தருக்கே உரித்தான மனஅமைதியுடன் செயற்பட்டமையினால் இலங்கை வாழ் மக்களை அந்தத்தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுப் பதற்கான நேரம் மிகவும் அண்மித்துள்ளது.
எனவே, நாம் தொற்றுநோயிலிருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
ஊரடங்குச் சட்டம் அல்லது சுகாதாரரீதியான சட்டதிட்டங்கள் தர்மத்தின் அடிப்படையிலான வாழ்வுக்குத் தடையாக அமைய மாட்டாது என்பதே எனது புரிதலாகும்.
இரண்டாயிரம் வருடங்களாக தர்மத்தின் அடிப்படையில் வாழ்வினைக் கழித்த பௌத்தர்களுக்கு வீட்டிலிருந்தவாறே பொருள் சார்ந்த மற்றும் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதற்கான ஒழுக்கப் பயிற்சி காணப்படுகிறது.
வெசாக் தினத்தில் விளக்கேற்றி, அலங்காரங்களைச் செய்து உளமகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வது பௌத்தரின் பழக்கமாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தீமைகளிலிருந்து நீங்குவதற்கும் நன்மைகளை அதிகரித்துக்கொள்வதற்கும் எவ்விதத்திலும் தடையாக அமைவதில்லை.
இந்த அனர்த்தத்தின்போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது. வாழ்க்கை நிலையற்றது எனவும், நிலையான எதுவுமில்லை எனவும் போதிக்கும் புத்த போதனையின் உண்மைத் தன்மையினை இந்த அனர்த்த நிலைமையில் முழு உலகும் புரிந்துகொண்டுள்ளதாகவே தெரிகிறது.
உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறும் புத்த போதனை இவ்வாறானஅனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.
ஏனைய நாடுகளுக்கு முன்னரே கோவிட் தொற்றினை வெற்றி கொள்வதற்கு பௌத்தர்கள் பழகிய, பயிற்சி பெற்ற அந்த பணிவொழுக்கமே காரணமாக அமைந்தது என நம்புகிறேன்.
எனவே வெசாக் காலத்தில் உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் ஒழுக்கத்துடன் பேணி, மன அமைதியுடன் வாழ்வினை நோக்கி, மூவுலகிற்கும் கருணை காட்டி, நாம் மும்மணிகளினதும் ஆசியை வேண்டி நிற்போம்.
அனைத்து உயிர்களும் துன்பங்களின்றி, நோய் நொடிகளின்றி வாழப் பிரார்த்திப்போம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
බුදුරජාණන් වහන්සේගේ උත්පත්තිය, බුද්ධත්වය හා පරිනිර්වාණය සිදු වූ වෙසක් මංගල්යය මෙවර සමරන්නට සිදුව ඇත්තේ කොරෝනා වසංගතයට ලංකාවසේම ලෝකය ම එකසේ මුහුණ දී ඇති තත්ත්වයක් යටතේ ය. දැඩි කැපකිරීමෙන්, ඉවසීමෙන් හා බෞද්ධයාට හිමි උපේක්ෂාවෙන් යුතුව කටයුතු කිරීම නිසා ලංකාවාසී ජනතාව එම වසංගතයෙන් මුදාගැනීමේ ජයග්රහණය අත්පත්කර ගැනීමට ආසන්නය. එබැවින් අප වෙසක් සැමරිය යුත්තේ වසංගතයෙන් මුදාගැනීම සඳහා කළ සටනේ ජයග්රහණය රැකෙන ආකාරයෙනි.
ඇඳිරි නීතිය හෝ සෞඛ්යමය නීතිරීති ධර්මානුකූල ජීවිතයට කිසිදු බාධාවක් ගෙනඑන්නේ නැති බව මගේ වැටහීමය. වසර දෙදහස් ගණනක් තිස්සේ ධර්මානුකූල ජීවිතයක් ගතකළ බෞද්ධයාට නිවසේ සිටම ආමිස පූජාවෙහි ද ප්රතිපත්ති පූජාවෙහි ද යෙදීමට තරම් ශික්ෂණයක් ඇත. වෙසක් දා ට පහණක් දල්වා සැරසිලි කර ආමිස පූජාවෙහි යෙදී චිත්ත ප්රීතිය වඩවා ගැනීම බෞද්ධයාට පුරුදුය. අකුසලින් දුරු වීමටත් සියලු කුසල් වැඩීමටත් උද්ගතව ඇති වාතාවරණය කිසිදු බාධාවක් නොවේ.
තථාගතයන් වහන්සේ පෙන්වා දුන් මාර්ගය මෙම ව්යසනයේ දී අපට පිහිටකොට සිටී. ජීවිතය නිශ්චිත නොවන බවත් ස්ථිරසාර කිසිවක් නැති බවත් කියවෙන බුදු වදනෙහි සත්යතාව මේ ව්යසනයේ දී ලෝකයම පසක් කරගත් බව පෙනේ. සිත, කය, වචනය යන තුන් දොර සංවර කර ගැනීමේ බුදු වදන මෙබඳු ව්යසනයන්ට මුහුණ දීමට ඇති හොඳම මගය.
වෙනත් රටවලට පෙරාතුව කොවිඩ් වසංගතයට එරෙහිව ජයග්රහණය ලැබීමට ද බෞද්ධයා පුරුදු පුහුණු කළ ඒ හික්මීම හේතුවන බව මගේ විශ්වාසයයි. එබැවින් මේ වෙසක් සමයේ සිත, කය, වචනය යන තුන්දොර හික්මවාගෙන උපේක්ෂාවෙන් ජීවිතය දෙස බලා තුන් ලොවටම මෙත් වඩා අපි තෙරුවන් සරණ යමු. සියලු සත්වයෝ නිදුක්, නීරෝගී වෙත්වා..
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வெசக் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
மே 07, 2020
Rating:

கருத்துகள் இல்லை: