பல சவால்களை சந்தித்த போதிலும் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் (Green City) செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் (UNDP) இணைந்து செயற்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் செயற்திட்டமானது, இலங்கையில் உள்ளூராட்சி முறையை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் British Council உள்ளிட்ட அபிவிருத்தி பங்காளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் பாரிய நிகழ்ச்சித் திட்டமாகும்.
அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவுப் போட்டியில் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் (Green City) செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இது காத்தான்குடி மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
குறித்த பெருந்திட்டத்தினை (Master Plan) தயாரிப்பதற்கான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வு UNDP-EML Consultant ஆகியோரினால் பின்வரும் விபரப்படி ஏற்பாடு செய்யப்பட்டு காத்தான்குடி Beachway மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி நகரமுதல்வர் SHM.அஸ்பர் நகரசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயளாலர், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட உயர்அதிகாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணகள் மற்றும் நகரசபை செயளாலர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதில் மேற்படி Green City வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்படதோடு எதிர்கால வேலைத்திட்டம் தெடர்பாகவும் ஆராயப்பட்டது
பல சவால்களை சந்தித்த போதிலும் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் (Green City) செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 24, 2021
Rating:

கருத்துகள் இல்லை: