நீங்கள் வழங்குவது சிறிய தொகையாக இருந்தாலும் அது புற்றுநோயாளிகளுக்கு பெரும் பங்களிப்பாக அமையும்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள புற்று நோயாளர்களுக்கான பராமரிப்பு சேவைகளை இன, மத, மொழி பிரதேச பேதமில்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்றது
இதுவரை சுமார் 450 க்கு மேற்பட்ட பலவகை புற்று நோயாளர்கள் இந்த பராமரிப்பு நிலையத்தினால் பயனடைந்திருக்கின்றார்கள்
இறைவன் நமக்கு வழங்கியதில் இருந்து சிறியதொரு தொகையையாவது புற்று நோயால் அவதியுறும் ஒரு நோயாளிற்கு வழங்க வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் கொண்ட மனிதர்களின் பங்களிப்புடனயே இந்நிலையம் இயங்கி வருகின்றது
இவ்வாறான மனிதாபிமான வேலைத்திட்டத்தில் நீங்களும் பங்கெடுக்க விரும்புகின்றீர்களா..?
நீங்கள் டயலொக் நெட்வேர்க் பாவனையாளராக இருந்தால் டயலொக் மூலமாக உங்கள் நன்கொடைகளை வழங்க முடியும்
ECH இடைவெளி வழங்க விரும்பும் தொகை என்பவற்றை குறிப்பிட்டு 366 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்புவதன் ஊடாக வழங்க முடியும்
அல்லது REG இடைவெளி ECH இடைவெளி வழங்க விரும்பும் தொகை என்பவற்றை டைப் செய்து 366 என்ற இலக்கத்திற்கு SMS செய்வதன் மூலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் நன்கொடை வழங்கக்கூடிய நிரந்தர கொடையாளியாகலாம்
நீங்கள் வழங்குவது சிறிய தொகையாக இருந்தாலும் அது புற்றுநோயாளிகளுக்கு பெரும் பங்களிப்பாக அமையும்
நீங்கள் வழங்குவது சிறிய தொகையாக இருந்தாலும் அது புற்றுநோயாளிகளுக்கு பெரும் பங்களிப்பாக அமையும்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 01, 2021
Rating:

கருத்துகள் இல்லை: