சிவனடி பாத மலைக்கு அதிகளவிலான யாத்திரிகர்கள் வருகை.
2022/2023 சிவனடி பாத மலை பருவ காலம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றும் இன்றும் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை.
கடந்த 2ம் 3ம் 4ம் திகதி களில் விடுமுறை காரணமாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த நிலையில் உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர கூறினார்.
இவ்வாறு வருகை தந்த யாத்திரிகர்கள் புகையிரத வழியாகவும் அரச தனியார் பேருந்து வழியாகவும் சிரிய ரக வேன் கார் மற்றும் இருசக்கர வாகனம் முச்சக்கர வண்டிகள் மூலம் தொடர்ந்து வருகை தந்த நிலையில் உள்ளதாகவும்.
நேற்று முதல் நல்லதண்ணி நகரில் உள்ள இரண்டு வாகன தயாரிப்பு இடங்கள் முற்றிலும் நிறம்பி விட்டதால் நல்லதண்ணி மரே மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் நிருத்தப் பட்டு உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்.........
இன்றும் நாளையும் விடுமுறை காரணமாக அதிகளவில் யாத்திரிகர்கள் வரும் வாய்ப்பு உள்ளது அதனால் போக்குவரத்து பொலிசார் சேவையில் ஈடுபட்டுத்த பட்டுள்ளனர்.
சிவில் உடையில் அதிகளவில் பாதுகாப்பு யாத்திரிகர்களுக்கு வழங்க பட்டு வருகிறது என அவர் கூறினார்.
சிவனடி பாத மலைக்கு அதிகளவிலான யாத்திரிகர்கள் வருகை.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2023
Rating:

கருத்துகள் இல்லை: