Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் இடம்பெறவுள்ள பெருநாள் கலை நிகழ்வு தொடர்பில் ஜம் இய்யதுல் உலமா ஊடக சந்திப்பு..


(எம்.பஹத் ஜுனைட்)

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ள சிறுவர்களுக்கான கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  வியாழக்கிழமை (05) காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா,  நகர சபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்  ஆகியவற்றின் ஏற்பாட்டில் உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்புடன் ஹஜ்ஜுப் பெருநாள் சிறுவர்களுக்கான கலை,கலாச்சார,
விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

சமய விழுமியங்களுக்கு மாற்றமான பெருநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் நோக்கில் இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்ட வகையில் கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் முதல் நாள் நிகழ்வில் ஆண்கள், சிறுவர்களும், இரண்டாம் நாள் பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஊடக சந்திப்பில் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷேய்க எம்.ஏ.அப்துல் கபூர் (மதனி), நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.சீ,எம்.ஏ.சத்தார், நகர சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.ஹம்தூன், புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் செயலாளர் பளீல் , மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வை.ஆதம் லெப்பை மற்றும் ஜம் இய்யதுல் உலமா உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காத்தான்குடியில் இடம்பெறவுள்ள பெருநாள் கலை நிகழ்வு தொடர்பில் ஜம் இய்யதுல் உலமா ஊடக சந்திப்பு.. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 06, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.