திரிபோஷ திட்டத்திற்கு கொரியா உதவி

காலநிலை மாற்றத்துடன் தொடங்கக்கூடிய, உள்நாட்டில் பெறக்கூடிய உணவுக் கட்டமைப்பு ஊடாக இலங்கையின் தேசிய திருபோச திட்டத்தை வலுப்படுத்துவதற்காக இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தி, கொரிய சர்வதேச ஒத்துழைப்பை பிரதிநிதித்துப்படுத்தும் நிறுவனம் (KOICA) மற்றும் இலங்கை அரசு நேற்று முன்தினம் 29 ஆம் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டு (Record of Discussion) கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் ஊடாக 10மில்லியன் அமெரிக்க டாலர் உதவி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டதுடன், அதனால் உயர் தரத்திலான உள்நாட்டு சொள உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நிறுவன அடிப்படை
யில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு ம், பிள்ளைகள் மற்றும் தாய்மாருக்காக நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முன்னணி போசாக்கு திட்டத்தின் நிலைபேறாண தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்திற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார மற்றும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரி நாயக டி சொய்சா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லீ யூலி (Lee Yooli) ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தினால் கொரிய அரசாங்கம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையே காணப்படும் நிலைப்பேறாண அபிவிருத்தியை இலக்காக வைத்து பொது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது..
இந்த ஒப்பந்தத்தினால் "Sow & Grow: Building Resilient Food Systems Of Higs Quality Maize In Srilanka For an Enhanced Thriposha Programme" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நான்கு வருட காலப்பகுதி முழுவதும் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டம் உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து இலங்கை அரசு மற்றும் தேசிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன் அது இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சோள விநியோகத்தின் காலநிலை பாதிப்பு, இந்தத் திட்டம் திரிபோஷா உற்பத்தியைப் பாதிக்கும் முறையான சவால்களை நிவர்த்தி செய்யும், இறக்குமதியைச் சார்ந்திருத்தல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் மற்றும் தர உத்தரவாத சிக்கல்கள் ஆகியவை அடங்கும்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 01, 2026
Rating:
கருத்துகள் இல்லை: