Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும்  Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள்  (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 



14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர்  ஓட்டப் போட்டியில் மாணவன் எம்.ஜே. ஹுஸ்னி முதலாம்  இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் , 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாணவன் எப். அஹமட் ஹஸி  இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×50 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பாடசாலை அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், எம்.ஏ.எம். அதீப், ஏ.அதீஸ் ஆகியோர் பங்குபற்றிய போட்டிகளில் திறமைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.


இச்சாதனைக்கு  ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள்,  மாணவனை பயிற்றுவித்த உடற்கல்வி  ஆசிரியர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், இப் போட்டியில் பங்குபற்றுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.