Home
Unlabelled
அடித்து துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களுக்குச் செய்யும் அக்கிரமம்
அடித்து துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களுக்குச் செய்யும் அக்கிரமம்
எம்.ஐ.அப்துல் நஸார்
சர்ச்சைக்குரிய ஹிமாலயப் பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை புது டில்லி அரசாங்கம் நீக்கியதோடு அப்பிரதேசத்தில் கட்டுப்பாடுகளையும் விதித்து சில நாட்களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்மீரில் அமைந்துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்டினுள் இந்தியப் படையினர் நுழைந்தனர்.48 மணித்தியலங்களுக்கும் மேலாக இரு சுற்றுக்களாக இந்திய இராணுவத்தினால் தான் தாக்கப்பட்டதாக 50 வயதான குழாய் பெருத்துனராக வேலை செய்யும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிராந்தியத்தில் இந்திய இராணுவத்தினரின் பிரசன்னத்திற்கு எதிராக கிளர்ச்சிக் குழுவில் இணைந்து கொண்ட அவரது இளைய சகோதரனை கண்டுபிடித்துத் தருமாறு கோரியதோடு அவரை சரணடையச் செய்யுமாறு அல்லது தண்;டனையைப் பெறுமாறு கூறச் சொல்லியே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது தடவை இராணுவ முகாமொன்றில் வைத்து ன்று படை வீரர்கள் தான் மயக்கமடையும் வரை தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தார் தெரிவித்தார். தான் கண் விழித்தபோது தான் வீட்டில் இருந்ததாகவும் தனது பிட்டப் பகுதியில் சிராப்புக் காயங்கள் மற்றும் இரத்தம் தோய்ந்திருந்த நிலைமை காரணமாக தன்னால் நிமிர்ந்து உட்கார முடியாமலிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தாக்குதல்கள் முடிந்துவிடவில்லை, கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி ஹெப் ஷிர்மால் கிராமத்திலுள்ள அவரது வீட்டினுள் நுழைந்த படையினர் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக சேமித்து வைத்திருந்த அரிசி மற்றும் ஏனைய உணவு தானியங்களிலும் உரம் மற்றும் மண்ணெண்ணெயினைக் கலந்து அவற்றை பயன்படுத்த முடியாதவாறு நாசம் செய்தனர்.
டார் மீது இந்தியப் படையினர் வன்முறைகளை அல்லது தாக்குதல்களை மேற்கொள்வது இதுவே முதல் தடவையல்ல.
கடந்த ஆகஸ்ட் 5 ஆந் திகதி பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தினால் பாதுகாப்புக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டதிலிருந்து இராணுவத்தினரால் தமது வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக காஷமீரிலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களில் தெரிவித்தனர்.
படையினர் தம்மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மின்சாரத்தை தம்மீது பாய்ச்சியதாகவும் தெரிவித்த அவாகள் அழுக்கை சாப்பிடுமாறும் கழிவு நீரை அருந்துமாறும் நிர்ப்பந்pக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர், இது தவிர, சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களில் நஞ்சைக் கலந்ததாகவும், தமது கால்நடைகளைக் கொன்றுவிட்டதகவும் தெரிவிக்கும் அவர்கள் தமது பெண் உறவினர்களை அபகரித்துச் சென்று திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகம் அவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். ஆயிரக்கணக்கான இளம் வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்குமாறு ஸ்ரீநகரில் அமைந்துள்ள இராணுவத் தiமையக வடக்குக் கட்டளைத் தளபதியின் பேச்சாளரான கேணல் ராஜேஷ் கேலியா கிராமவாசிகளின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததோடு அக்கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் இந்திய இராணுவத்தினர் மனித உரிமைகளை மதிப்பதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப் பகுதியில் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் கேலியா தெரிவித்தார்.
தேசியத்திற்கு எதிரான மற்றும் தொந்தரவை ஏற்படுத்தும் செயற்பாடுடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில இளைஞர்கள் நாட்டின் சட்டத்திற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் எந்தவித நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடவில்லை, அங்கு எவ்வித அட்டுழியங்களும் இடம்பெறவில்லை என இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார்.
அவர்கள் எமக்கு மின்சாரம் பாய்ச்சினர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளினாலும் உரிமை கோரப்படும் இரு பிராந்தியங்களில் புது டில்லியின் நிருவாகத்திற்கு எதிரானவர்கள் தொடர்பில் திட்டமிட்ட துஷ்பிரயோகங்களையும் நியாயத்தற்கு முரணான கைதுகளையும் இந்திய இராணுவம் மேற்கொள்வதாக காஷ்மீர் மக்களும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 5 ஆந் தேதி காஷ்மீரின் சுயாட்சி அதிகாரத்தை நீக்கி, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததோடு தகவல்தொடர்புகளையும் முடக்கிய ஐந்து வாரங்களில் காஷ்மீரில் விரக்தி, கோபம் மற்றும் பயம் என்பன அதிகரித்துள்ளன.
மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், வர்த்தக நிலையங்களை மீண்டு; திறக்கக்கூடிய வகையிலும் பிரதான நகரான ஸ்ரீநகரின் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், வன்முறை மற்றும் அச்சுறுத்தலின் நடவடிக்கைகள் தொடர்பில் புகார்களை முன்வைக்கின்றனர். அங்கு காணப்படும் அடக்குமுறைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையோடை அடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை போன்று காணப்படுவதாக கிராமப்புற மக்கள் தெரிவிக்கின்றனர்.
படையினரால் இரவு நேரத் தேடுதல்களின்போது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் காஷ்மீருக்கு எதிராக புது டில்லி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கௌ;ளத் தொடங்கிய ஆகஸ் மாத முற்பகுதியிலிருந்து ஆரம்பமானதாக குறைந்தது 200 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலிலிருந்து தெரியவந்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் என உத்தியோபூர்வமாக அழைக்கப்படும் மாநிலத்திற்கு சில அரசியல் சுயாட்சி மற்றும் காணி தொடர்பான உரிமைகளும் வழங்கப்பட்டிருந்த பல தசாப்த கால அரசியலமைப்பு ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் வலிதற்றதாக்கியதையடுத்து அதன் அந்தஸ்தில் மாற்றம் ஏற்பட்டது.
அந்த மாநிலம் தற்போது தரம் குறைக்கப்பட்டு சமஷ்டி அரசாங்கத்தின் இரு ஆள்புலப் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளது. இந்தச் செற்பாடு உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பரிகாம் கிராமத்தில் வெதுப்பகத் தொழில்புரியும் சொனாஉல்லாஹ் சோபியின் குடும்பத்தினர் தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது இராணுவத்தினர் திடீரென அவர்களது வீட்டினுள் நுழைந்தனர். படையினர் தனது இரு ஆண் பிள்ளைகளையும் வீதிக்கு இழுத்துச் சென்று துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் இரும்புச் சங்கிலிகளினாலும் தடிகளினாலும் தாக்கியதாக சோபி தெரிவித்தார்.
எனது பிள்ளைகளை நடுத்தெருவில் போட்டு காட்டு மிராண்டித்தனமாக இராணுவத்தினர் தாக்கியபோது அவர்கள் வீரிட்டு அழுதனர். என்னால் எதுவும் செய்ய முடியாத நிர்க்கதி நிலையில் நின்றிருந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் மேலும் 10 இளைஞர்கள் இராணுவத்தினரால் கிராமத்தின் மத்திய பகுதிக்கு அழைத்த வரப்பட்டனர். இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கூறுமாறு கேட்டனர். என ஆகஸ்ட் 7 ஆந் திகதி இடம்பெற்ற சம்பவத்தினை நினைவு கூருகின்றார் சோபியின் 20 வயது மகனான முஸப்பர் அஹமட்.
எங்களது முதுகிலும் கால்களிலும் மூன்று மணிநேரமாகத் தாக்கினர், அவர்கள் எமக்கு மின்சாரத்தைப் பாய்ச்சினர் எனத் தெரிவித்த அஹமட் தனது மேலாடையினை உயர்த்தி முதுகில் இருந்த எரிகாயங்களையும் சிராயப்புக் காயங்களையும் காண்பித்தார்.
நாங்கள் அவர்களிடம் எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம் ஆனால் அவர்கள் மேலும் ஆத்திரமுற்று கடுமையாகத் தாக்கினர். அழுக்குகளை உண்ணுமாறும் சாக்கடை நீரை அருந்துமாறும் எம்மை நிர்ப்பந்தித்தனர் எனவும் அவர் தெரிவித்தார
அதிகாலை வேளையில் படையினர் எம்மை கைவிட்டுச் சென்றனர். நாம் வலியினால் துடித்துக்கொண்டிருந்தோம் எனர் தெரிவித்த வெதுப்பகப் பணியாளரான முஸப்பர் அஹமட், தானும் தனது மூத்த சகோதரனும் மேலும் சுமார் எட்டுப்பேரும் ஒரு அம்புயுலன்ஸ் வண்டியில் ஒட்டுமொத்தமாக ஏற்றப்பட்டு ஸ்ரீநகரிலுள்ள வைத்தியசாலையொன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடக்கம் குறைந்தது 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களுள் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச ஊடக நிறுவனமொன்றினால் பதிவேடுகளும் பார்வையிடப்பட்டன
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தினை மீறியதாக சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சட்டத்pன் பிரகாரம் விசாரணைகள் எதுவுமின்றி இரு வருடங்களுக்கு ஒருவரை தடுத்து வைக்க முடியும்.
ஆயிரக் கணக்கானோர் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் பங்குபற்றிவிடாமல் தடுப்பதற்கேயாகும்.
சிலர் விடுவிக்கப்பட்டு சில நாட்களின் பின்னர் மீண்டும் வருமாறு அழைக்கப்படுகின்றனர். சிலர் பகல்பொழுதில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இரவில் விடுவிக்கப்படுகின்றனர். இரவில் அவரவர் வீடுகளில் உறங்கியதன் பின்னர் மீண்டும் மறுநாள் காலையில் அழைத்து வருமாறு பெற்றோர்கள் பணிக்கப்படுன்றனர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சுதற்திரம் பெற்றதிலிருந்து, 1940 களிலிலிருந்து காஷ்மீர் தொடர்பான முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. இரு நாடுகளும் காஷ்மீர் தொடர்பில் இரண்டு யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. அப் பிராந்தியதின் ஒவ்வொரு பகுதியினை இரு நாடுகளும் நிருவகித்து வருகின்றன
இந்தியா ஆரம்பத்;தில் தனது நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீர் பிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையே கட்டுப்படுத்த வேண்டியிருந்தது
எவ்வாறெனினும், தொடர்ச்சியான அரசியல் குழப்பங்கள், மீறப்பட்ட வாக்குறுதிகள், மாற்றுக் கருத்துடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக இந்திய நிருவாகத்திற்குட்பட்ட பகுதியில் 1989 ஆம் ஆண்டு இந்திய கட்டுப்பாட்டிற்கு எதிரான ஐக்கிய காஷ்மீரக்கான பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. காஷமீருக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டு அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான மறைமுக யுத்தமாக இந்தியா கருதுகின்ற இந்த முரண்பாட்டில் இதுவரை சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரதும் பரா இராணுவப் பொலிஸாரினதும் தொடர் ரோந்து இடம்பெறும் இப் பிராந்தியம் உலகில் மிகப் பாரிய அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான காஷ்மீர் மக்கள் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை வெறுப்பதோடு கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
காஷ்மீரிலுள்ள புதிய தலைமுறையினால் இப் போராட்டம் புது வடிவம் பெற்றுள்ளது. புது டில்லியின் நிருவாகத்திற்கு துப்பாக்கிகளினாலும், சமூக வலைத்தளத்தினாலும் சவால் விடுக்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்திய பாராஇராணுவத் தொடரணி மீது முழுமையான வெடிபொருள் நிரப்பப்பட்ட வேன் ஒன்றினைக் கொண்டு சென்று காஷ்மீர் தற்கொலைதாரியொருவர் மோதி வெடிக்கச் செய்ததில் 40 பேர் கொல்லப்பட்டதோடு இரண்டு டசினுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கிளர்ச்சிக்காரர்களைக் கையாள்வதற்கு அரசாங்கப் படையினருக்கு 'முழுமையான சுதந்திரம்' வழங்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தியப் படையினர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் மூலமும் சட்டத்திற்குப் புறம்பான கைதுகள் மூலமாகவும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதாக மனித உரிமைக் குழுக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்தியா மீது குற்றம் சுமத்தி வருகின்றன. இதனை மறுக்கும் இந்திய அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டினை பிரிவினைக்கான பிரச்சாரம் எனத் தெரிவிக்கின்றனர்.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் மனித உரிமைக் குழுக்களினால் முன்வைக்கப்படும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களில் பாலியல் வன்புணர்வு, புணரச் செய்தல், தண்ணீர் ஊற்றி சித்திரவதை செய்தல், பிறப்புறுப்புக்களில் மின்சாரம் பாய்ச்சுதல், எரிகாயங்களை ஏற்படுத்ததல் மற்றும் தூங்க விடாது தடுத்தல் என்பன உள்ளடங்கியுள்ளன.
காஷ்மீரில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வு, சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக சுதந்திரமான சர்வதேச விசாணையொன்று நடத்தப்பட வேண்டும் என கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அந்த அறிக்கை பொய்யானது என இந்தியா மறுத்;தது.
தற்போது இடம்பெற்றுவரும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான புதிய அறிக்கைகள் தொந்தரவு தருவனவாகவுள்ளதாக முன்னணி இமனித உரிமைகள் சட்டத்தரணியான பர்வேஸ் இம்ரோஸ் தெரிவித்தார்.
பரந்த அப்பிள் தோட்டங்களைக் கொண்ட கிராமங்களில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் படையினர் வரும்போது பயமும் கோபமும் கலந்த உணர்வினை தெளிவாகக் காணமுடிகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாத முற்பகுதியிலிருந்து கிராமத்திலுள்ள தனது வீட்டை படையினர் ஏழு தடவைகள் சோதனையிட்டுள்ளதாகவும் அவர்கள் வருவதற்கு முன்னதாக தனது மகளை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி விடுவதாகவும் 60 வயதான அப்துல் கானி தார் தெரிவித்தார்.
எனது மகனைத் தேடி வருவதாக அவர்கள் கூறுவார்கள் ஆனால் எனக்குத் தெரியும், அவர்கள் எனது மகளைத் தேடியே வருகின்றனர் கண்ணீருடன் அப்துல் கானி தார் தெரிவித்தார்.
திருமணம் செய்து கொள்வதற்காக எமது சிறுமிகளை கொண்டு செல்லவுள்ளதாக படையினர் அச்சுறுத்தியதாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவித்தனர்.
வெற்றிபெற்ற இராணுவத்தினர் போல எமது வீடுகளுக்குள் அவர்கள் நுழைகின்றனர். எமது உயிர்கள், சொத்துக்கள் மற்றும் கௌரவத்தின் மீது தமக்கு உரிமை இருப்பது பொன்று செயற்படுகின்றனர் என அரிஹாலில் வசிக்கும் நாஸிர் அஹமட் பட் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாத முற்பகுதியில் ராபிக் அஹமட் லோனே வெளியே சென்றிருந்தபோது வீட்டினுள் படையினர் நுழைந்தனர்.
எமது வீட்டை சோதனையிடுவதற்கு தம்முடன் வருமாறு படையினர் எனது மனையியை அழைத்துள்ளனர். அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததும் துப்பாக்கியின் பின்புறத்தினாலும் தடிகளினாலும் அவளைத் தாக்கியுள்ளனர் என லோனே தெரிவித்தார்.
எனது மனைவி தாக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் தமது சேவலையும் கொன்றுவிட்டதாக லோனே மேலும் தெரிவித்தார்.
அடித்து துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களுக்குச் செய்யும் அக்கிரமம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 23, 2019
Rating: 5

கருத்துகள் இல்லை: