பாலமுனை வைத்தியசாலையில் இடை நிறுத்தப்பட்டுள்ள அம்புலன்ஸ் சேவையினை மீழவும் ஆரம்பியுங்கள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சியாத் வேண்டுகோள்.
மண்முனைப் பற்று பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று 27.06.2025 ஆரயம்பதி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பாலமுனை பிரதேச சபை உறுப்பினர் MAM.சியாத் உரையாற்றினார்.
கடந்த காலங்களில் பாலமுனை வைத்தியசாலைக்கென ஒரு அம்புலன்ஸ் வண்டி சேவையில் இருந்தது. ஆனால் அது மிக நீண்ட நாட்களாக இல்லாதிருக்கின்றது.
குறிப்பாக சொல்லப்போனால் பாலமுனை வைத்தியசாலைக்கென இருந்த அம்புலன்ஸ் வண்டியை காணவில்லை.
எமது மக்கள் இதனால் சிரமப்படுகின்றனர். நள்ளிரவில் ஒரு அனர்த்தம் ஏற்படுமாயின் அம்புலன்ஸ் வண்டி இல்லை இதற்கு யார் பொறுப்பு கூறுவது.
அண்மையில் நள்ளிரவு 1 மணியளவில் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டு அவரை
முற்சக்கர வண்டியில்தான் (Auto) கொண்டு சென்றனர் என்று தனது ஆதங்கத்தினை சபையில் முன்வைத்தார்.
Participants include:
* Hon. Kanthasamy Prabu, MP & DCC Chairman
* Hon. Rasamanikkam Sanakyan , MP
* Hon. Dr. Ilayathambi Srinath, MP
* Mrs. Thadchanagowry Dinesh, Divisional Secretary (Manmunai Pattru)
* Heads and staff of all relevant government departments
(இதற்கான தீர்வு விபரம் விரைவில்)
ஏ.எல். டீன் பைரூஸ்
ஊடகவியலாளர்
பாலமுனை வைத்தியசாலையில் இடை நிறுத்தப்பட்டுள்ள அம்புலன்ஸ் சேவையினை மீழவும் ஆரம்பியுங்கள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சியாத் வேண்டுகோள்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: