கொரோனா நோய் கிருமி தொற்று பரவுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை மக்கள் அனைவரும் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்
கொரோனா நோய் கிருமி ஆகிய கொவிட் – 19 தொற்று இலங்கையிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனைத் தடுப்பதற்காக ஆரம்பித்துள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த நோய் கிருமி பரவியுள்ளது. அதனை தடுப்பதற்கு அந்தந்த நாடுகள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
எமது நாட்டில் கொரோனா நோய் கிருமி தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர் நேற்று பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.
52 வயதையுடைய, சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்படுகின்ற ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலி நாட்டு சுற்றுலாக் குழு ஒன்றுடன் அவர் வழியாட்டியாக இணைந்து செயற்பட்டிருந்திருக்கிறார்.
தற்போது, மேற்படி நோயாளி நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உற்படுத்தப்பட்டிருக்கின்றார். அவருக்கு அவசியமான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் அனில் ஜாசிங்ஹ மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா நோய் கிருமி தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான திட்டத்துடன் கூடிய பரந்துபட்ட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், நேற்று முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை நோய்த்தடுப்புச் செயற்பாட்டுக்கு உற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, அதேபோல - வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்களும் மற்றும் நாட்டில் வாழும் பொது மக்களும், முன்னெடுக்கப்படுவரும் மேற்படி வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கத்தினால் வேண்டப்படுகின்றார்கள்.
கொரோனா நோய் கிருமி தொற்று பரவுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை மக்கள் அனைவரும் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 11, 2020
Rating:

கருத்துகள் இல்லை: