பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற் காெள்ளுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்
பட்டுள்ள அறிக்கையில்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற் காெள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவது தொடர்பான அறிவித் தலையும் வழிகாட்டலையும் நிறுவனங்களின்தலைவர்கள் அறிவிப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.sor/nl
பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி..!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 09, 2020
Rating:

கருத்துகள் இல்லை: