Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் 14 கிராமிய மைதானங்கள் சுமார் 21 மில்லியன் செலவில் புணருத்தானப் பணிகள் ஆரம்பித்து வைப்பு.


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கீழ் செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம் என்ற செயற்றிடத்திதன் அடிப்படையில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாட்டிலுள்ள 332 கிராமிய மைதானங்களை புணரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும்  (2021.03.02) சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இவ்வேலைத்திட்டம் ஏற்வூர் பற்று செங்கலடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்றது.


மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய விளையாட்டு மைதானமாகிய சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டு மைதானத்தினை சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் புணரமைக்கும் வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமன சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரத அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி ஆரம்பித்து வைத்தார். 


இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கருத்து வெளியடுகையில்......


மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இம்மாவட்டம் பலவித வளங்களைக் கொண்டு பயனடைய முடியத நிலையில் இருந்தது. நாம் அரசோடு இணைந்து தற்போது மனிதவள அபிவிருத்தியூடாக இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புக்கள், அரசின் கொள்கையின் அடிப்படையில் உள்ளுர் உற்பத்தி அதிகரிப்பு, விசாயப் பாதுகாப்பு என பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 


கொவிட் 19 இன் தாக்கத்திற்கு மத்தியிலும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள், கிராமப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளோம். 


மேலும்.....

நெல் மற்றும் அரிசி என்பவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் எமது மாவட்டம் அதிகம் நன்மையடைகிறது  என அவர் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செலகத்தின் ஏற்பாட்டில் யங் ஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் ஜோன் தேசியாமணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் உட்பட அரச அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், யங் ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அரசினால் நாட்டிலுள்ள 332 கிராமிய விளையாட்டு iதானங்களை அபிவிருத்தி செய்யும் இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் 14 மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் 14 கிராமிய மைதானங்கள் சுமார் 21 மில்லியன் செலவில் புணருத்தானப் பணிகள் ஆரம்பித்து வைப்பு. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 03, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.