பென்டகன் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியவில்லை, மைத்திரி வியாக்கியானம்!
இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது இன்று முழு உலகமும் எதிர்கொண்டு வரும் பிரச்சினை எனவும் மனித சமூகத்திற்கு அது பெரும் அச்சுறுத்தல் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாரிய பண பலம் உள்ள, தொழிநுட்பத்தில் உயர்ந்த, உலகின் பலமிக்க நாட்டின் பாதுகாப்பு தலைமையகம் என கருதப்படும் பென்டகன் கட்டிடத்திற்கு செப்டெம்பர் 11ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அமெரிக்காவினால் தடுக்க முடியாது போனதாகவும் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு பின்லேடன் கூறியிருந்த போதும் தாக்குதலை தடுக்க முடியாது போனதெனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தேசம், மொழி, பௌத்தம் என்பவற்றை பாதுகாக்க நாம் எப்போதும் முன்னிற்க வேண்டும் என அவர் கூறினார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
br/lnw
பென்டகன் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியவில்லை, மைத்திரி வியாக்கியானம்!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2021
Rating:

கருத்துகள் இல்லை: