Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கழுதைகள் கத்துவதை
கவரிமான் கண்டு கொள்வதில்லை.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் இரண்டு பதிவுகளை செய்திகளாக பதிவேற்றியிருந்தேன்.
இரண்டு செய்திகளும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் உடன் தொடர்புபட்டவை.

பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டவர்களில் சிலர் எனக்கு தாறுமாறாக வசைபாடியிருந்தனர்.

இவ்வாறு வசைபாடியவர்கள் மாற்றுக் கட்சியை சார்ந்த மற்றும் உட்கட்சியில் எதிர் போட்டி அரசியல் செய்பவர்களும்
பேஸ்புக்கில் பேக் அய்டியில் ஏரோபிளேன் ஓட்டுபவர்களுமாகும்.

முதலில் ஆதார வைத்தியசாலை தொடர்பில் இவ் வைத்தியசாவையை கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து  விடுவிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அவை எதுவும் கைகூடவில்லை. 

பின்னர் கொரோனா சிகிச்சை நிலையம் இயங்கத்தக்கதாக வைத்தியசாலையை அதே இடத்தில் முழுமையாக இயங்க வைக்க பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முயற்சி  எடுத்தது.
 
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கோரிய போதும் எதுவும் நடக்கவில்லை. பின்னர்  மாவட்ட  அபிவிருத்திக் குழுத்தலைவரான கெளரவ  சந்திரகாந்தனை சம்மேளனம் சந்தித்துக் கோரிய போதும் எதுவும் நடைபெறவில்லை.

நான் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் இடம் கோரிக்கை முன்வைத்து இருந்தேன்.

கடந்த 08/03/2021 காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விஷேட அபிவிருத்தி கூட்டத்தில் மேற்படி வைத்தியசாலையை விடுவிப்பது தொடர்பில்  பல முயற்சிகள் மேற் கொண்டும் எதுவும் நடைபெறவில்லை 
என்ற விடயம் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் தெளபீக் மற்றும் சபீழ் நழீமி ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன்
வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்குவதால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்னாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
பின்னர் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில் வைத்தியசாலையை முழுமையாக விடுவிக்க  கோரினால் அக்கோரிக்கையை அரசு கவனமெடுக்காது வைத்தியசாலையில் கொரோனா  பிரிவு இயங்கத்தக்கதாக
ஏனைய பிரிவுகளையும் இயங்க  வைக்க கோருவதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தார்.
நேற்று இவ்விடயத்தை ஆராந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் மட்ட  குழுவும் நேற்று 13/03/2021 சனிக்கிழமை ஆதார வைத்தியசாலைக்கு விஜயமும் செய்தது.

இது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையுமல்ல, மாகாண சபைக்கு வால் பிடிக்கும் கூத்துமல்ல. 
அல்லாஹ்வின் உதவியால் ஹாபிஸை வெல்ல வைத்த நாம் அவரைக் கொண்டு நம் ஊரின் தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள உச்சபட்ச 
முயற்சி செய்வோம் .இது எனது கடமை.

நான் நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான் அல்ல.1985 ஆண்டிலிருந்து தொடராக பொதுப் பணி செய்பவன். எனது பொதுப் பணியே என்னை அரசியலுக்கு  அழைத்து வந்தது. மாறாக அரசியலுக்கு  வந்த பின் பொதுப் பணியை ஆரம்பித்தவன் கிடையாது.

பேக்அய்டியில் எழுதுபவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

எனக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இன் ஷா அல்லாஹ் நாளை எனது விளக்கப் பதிவை எதிர்பாருங்கள்.

அல்லாஹ் போதுமானவன் 

அன்புடன் 
யுஎல்எம்என்.முபீன்
Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 14, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.