நாட்டுக்குள் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டு வர முடியாது என பாதுகாப்பு அமைச்சு சட்டம் போடவில்லை
நாட்டுக்குள் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டு வர முடியாது என பாதுகாப்பு அமைச்சு சட்டம் போடவில்லை. மாறாக வருகின்ற புத்தகங்கள் பாதுகாப்பு தரப்பின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றே சட்டம் போடப்பட்டுள்ளது.
இது உண்மையில் மிகவும் வரவேற்கத்தக்க சட்டமாகும். நான் அறிய சவூதி அரேபியாவில் 40 வருடங்களுக்கு மேலாக உள்ளது.
இஸ்லாமிய புத்தகமோ எந்த புத்தகமோ விற்பனைக்கு என அல்லது மொத்தமாக வருமாயின் அது பாதுகாப்பு தரப்புக்கு வழங்கப்பட்டு சோதிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும். இதற்கென தம்மாம் போன்ற பிரதான நுழை வாயில்களில் அரபு மொழி அல்லாத உதாரணமாக தமிழ் மொழியில் வரும் புத்தகங்களை ஆராயவென இலங்கையை சேர்ந்த மௌலவிமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நீண்ட காலம் பணிபுரிந்த புத்தளத்தை சேர்ந்த நண்பர் உவைஸ் மௌலவி அண்மையில் மரணமானார்.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு இஸ்லாமிய புத்தகங்களே காரணம் என்ற கருத்து சிங்கள மக்களிடம் உள்ளது. இக்கருத்து ஏற்படுவதற்கு காரணம் நமது முஸ்லிம்கள் கொடுத்த பிழையான விளக்கங்களாகும்.
ஸஹ்ரானின் தாக்குதலுக்கு பிரதான காரணம் ரணில், மைத்திரி, சஜித் ஆட்சியில் முஸ்லிம்கள் மீது அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட தாக்குதலும் அந்த அரசின் ஊழலை மறைக்க தாக்குதலுக்கான அந்த அரசின் ஆதரவுமாகும்.
இந்த நிலையில் புத்தகங்களால் தீவிரவாதம் தூண்டப்படுகிறது என அரச தரப்பு சிந்திப்பதை நாம் குறை காண முடியாது. காரணம் இந்த நாட்டில் ஏற்பட்ட தமிழ்த்தீவிர போராட்டம், ஜேவிபி போராட்டம் என்பன கால்மார்க்ஸ், லெனின், மாவோ சேதுங் போன்ற இடதுசாரி புரட்சியாளர்களின் புத்தகங்களால் தூண்டப்பட்டதே.
இதனால்த்தான் இவர்களின் புத்தகங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இஸ்லாமிய புத்தகங்களை தடை செய்தால் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்ற அரசின் எண்ணத்துக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். சில காலம் போனதும் அரசுக்கு புரியும் உண்மையான இஸ்லாமிய புத்தகங்கள் ஒரு போதும் அப்பாவிகள் மீதான அத்துமீறல்களுக்கு அனுமதிக்காது என்பது.
ஆகவே இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் அலட்டிக்கொள்ளாமல் இதில் அரச பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்.
-முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
நாட்டுக்குள் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டு வர முடியாது என பாதுகாப்பு அமைச்சு சட்டம் போடவில்லை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 15, 2021
Rating:

கருத்துகள் இல்லை: