கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (15.03.2021 திங்கள்) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய அல் ஹாபிழ் Z.A.நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக எல்லை நிர்ணய விடயம், இவ்வாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்ட முன் மொழிவுகள் , கல்வி, சுகாதாரம் உற்பட ஏனைய சேவைகள்
சம்பந்தமான விடயங்கள் ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில் போதைவஸ்து பாவனையின் காரணமாக பல சமூக சீர் கேடுகள் நடைபெறுவது சுட்டிக்காட்டப்பட்டதிற்கு அமைவாக அதை தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க முன்மொழியப்பட்டது.
இந்நாட்டில் கோரோணாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய
ஜனாஸா நல்லடக்க விடயம்
முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த விடயத்தில் உளப்பூர்வமான அக்கறையோடு செயற்பட்ட ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு பிரிவினர், துறை சார்ந்த வல்லுனர்கள், சுகாதார பிரிவினர், பிரதேச மக்கள் , அனைவருக்கும் இந்த சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செயலாளர் SH. முஸம்மில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா நிரஞ்சினி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் நெளபர், ஒட்டமாவடி பிரதேச சபை செயலாளர் சிகாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் தனஞ்ச பெரமுன பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் SMASM. சரூஜ் (நகரசபை உறுப்பினர்), முன்னாள் தவிசாளர் MIM. தஸ்லீம், ZM. ஹிதாயத்துல்லாஹ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) மற்றும் உயர் அதிகாரிகள் அரச திணைக்கள அதிகாரிகள் நிறுவனங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 15, 2021
Rating:

கருத்துகள் இல்லை: