Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மக்கள் ஈக்களைப் போன்று செத்து விழுவதாக கருத்து வௌியிட்ட வைத்தியருக்கு பாராளுமன்றில் கிடைத்த பரிசு!

 


அவிசாவளை வைத்தியசாலையின் கொரோனா நிலைமை குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வௌியிட்ட நஜித் இந்திக்க என்ற வைத்தியர் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றில் கருத்து வௌியிட்டார். 

வைத்தியர் கடமையை செய்யாது முகநூலில் பதிவுகளை வௌியிட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். 

"அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க முகநூலில் மரண அவலம் குறித்து எழுதுகிறார். அவர் முகநூலில் எழுதுவதை விடுத்து வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முகநூலில் கொரோனா நோயாளர்களை குணப்படுத்த முடியாது. இன்று இதுவொரு அலையாக மாறிவிட்டது. முகநூலில் வந்து அங்கு அத்தனை பேர் இங்கு இத்தனை பேர் இறக்கின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என்று எழுதுகின்றனர். இதன்மூலம் நாட்டை அழிக்கவே பார்க்கின்றனர்" என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 

அவிசாவளை வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் ஈக்களைப் போன்று செத்து மடிவதாக வைத்தியர் நஜித் இந்திக அண்மையில் முகநூல் வழியாக கூறியதை அடுத்து அவரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.

lnw

மக்கள் ஈக்களைப் போன்று செத்து விழுவதாக கருத்து வௌியிட்ட வைத்தியருக்கு பாராளுமன்றில் கிடைத்த பரிசு! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 18, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.