நாளைய மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (28) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு
நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள்
3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு
காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரையான காலப்பகுதியினுள்
2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,
மாலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 27, 2022
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: