“MICHAUNG” சூறாவளியின் தற்போதைய நிலை என்ன?
மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது நேற்று வட அகலாங்கு 14.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.30 E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்காக ஏறத்தாழ 520 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
அது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி வடக்குத் திசையில் நகர்ந்து இன்று 11.30 மணியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதையடுத்து, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். R.tm
.jpg)
கருத்துகள் இல்லை: