பாடசாலை நூலகத்திற்கு பெற்றோர் ஒருவரினால் 50 கையெழுத்துச் சஞ்சிகைகள் கையளிப்பு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையானது இலங்கையில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் முதன்மையானதும் சிறந்து விளங்கும் ஒரு பாடசாலையாகும். அது மாத்திரமல்லாது தேசிய ரீதியான பல்வேறு சாதனைகளை மிக அன்மைக்காலமாக அடைந்து வருதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான சாதனைகளுக்குப் பின்னால் சிறந்த நிருவாகத் திறமை கொண்ட அதிபரும் பாடசாலையை வழிநடாத்தும் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் தலை சிறந்த ஆசிரியர் குழாத்தின் ஒத்துழைபபும் இங்கு காணப்படுவது சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் சர்மிலா.ஏ.நசீர் என்ற பெற்றோர் தாமாக முன்வந்து மிரா பாலிகா தேசிய பாடசாலையின் நூலகத்திற்கு இது வரை சுமார் 50 கையெழுத்துச் சஞ்சிகைகளை அன்பளிப்பாக வங்கியுள்ளார்.
இந் நிகழ்வு அதிபர் காரியாளத்தில் இடம்பெற்றதுடன் இப் பாடசாலையின் பிரதி அதிபரான MLM.லாபீர் அவர்களும் உதவி அதிபாரான APM. ஜலால்தீன் அவர்களும் மாணவிகள் பெற்றோர் சகிதம் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மீரா பாலிகா தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக செயற்படுகின்ற நூலக வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நூலகத்திற்கு பெற்றோர் ஒருவரினால் 50 கையெழுத்துச் சஞ்சிகைகள் கையளிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 30, 2024
Rating:
கருத்துகள் இல்லை: