உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு
"பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம் "எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு பூனொச்சிமுனை MR கார்டன் வளாகத்தில் றம்யமான சூழலில் காலை 8மணி முதல் மதியம் 12மணி வரை அதிபர் MCM.முனீர் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக அல் ஹாஜ் A.L.மீராசாஹிப்
JP(முன்னாள் தலைவர் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி சிந்து உஷா, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்தி பரிசில்கள் வழங்கி உற்சாகமூட்டினர்.
இதன் போது மாணவர்களின் பல கலை நிகழ்வுகளும் விளையாட்டு
நிகழ்வுகளும் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2024
Rating:

கருத்துகள் இல்லை: