Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்க அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனை.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் மக்கள் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான உறவின்மையாகும். அது அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அத்தியாவசியமான மாகாணமான மேல்மாகாணத்திற்கு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேல்மாகாணத்தில் இருக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் வாகனம் ஒன்று வேறு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த மாகாணத்தில் இருந்து வருமான அனுமதிப்பத்திரம் பெறுவது என்பது நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் விரயமாக்கும் மிகவும் கடினமான பணியாகும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த சிரமம் குறித்து கவனம் செலுத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், ஏனைய மாகாணங்களுடன் மேல் மாகாணத்தை இணைக்க தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு மேல் மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்க அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனை. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 19, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.