Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அஸ்வெசும நலன்புரிச் திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவிகளை பெறுவதற்கு, இதுவரை விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, 2024 .11.25முதல் 2024.12.02ஆம் திகதி வரை அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் உரிய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

அதற்கான உரிய விண்ணப்பத்தை அந்தந்த பிரதேச செயலக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.wbb.gov.lk என்ற நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 


அஸ்வெசும நலன்புரிச் திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 23, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.