Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர சபையினாள் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள்

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட மழைநீர் வெள்ளம் கடலுக்கு வடிந்தோடும் முகமாக காத்தான்குடியின் அல் மனார் மற்றும் Dr.அலீம் பால்வத்தோடைகள் இன்றைய தினம் (25) காத்தான்குடி நகர சபையால் வெட்டப்பட்டது.
இதன் போது அவ்வியற்கை ஓடைகளில் பொது மக்களால் சட்ட விரோதமாக வீசி எறியப்பட்டிருந்த பெருமளவிலான வீட்டுக் குப்பைகளையும் துப்பரவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், பௌசி மாவத்தையில் மழை நீர் வடிந்தோடும் பகுதிகளை தடைசெய்யும் விதத்தில் குடியிருப்பாளர்களால் அனுமதியின்றி களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த கட்டடப் பொருட்கள் சபையால் பறிமுதல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி நகர சபையினாள் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 25, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.