இனவாதத்தை தூண்டும் வகையில் போலி தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!
புலிகளை நினைவுகூர்ந்திருந்தால் அது தொடர்பிலும், அதேபோல மாவீரர் தினம் தொடர்பில் இனவாதத்தை துண்டும் வகையில் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகளை வெளியிட்ட தரப்புகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்றும் உள்ளது. இதனைமீறி செயற்பட முடியாது. அவ்வாறு நினைவேந்தல் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.
அதேபோல நடக்காத நினைவேந்தலை நடந்தாகக்கூறி, அரசாங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மக்களை தூண்டும் விதத்திலும் கடந்த கால நினைவேந்தல் படங்களை வெளியிட்டு அரசாங்கம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவருக்கும் சட்டத்தை கையில் எடுத்து பழைய காலம்போல் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது. அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பட அல்ல, சட்டம் உரிய வகையில் செயற்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் என்னால் வெளியிடப்படாத கருத்துகளை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி இனவாதத்தை தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளன. இவை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும். இந்நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம். தோல்வி அடைந்த அரசியல்வாதிகள் இனவாதத்தை கையில் எடுத்துவதற்கு முற்படுகின்றனர்.”- என்றார்.
இனவாதத்தை தூண்டும் வகையில் போலி தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 02, 2024
Rating:

கருத்துகள் இல்லை: