மொனராகலை மாவட்ட இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட இலக்கியப் போட்டிகளின் சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் மொனராகலை மாவட்ட செயலகத்தில் 'வெல்லஸ்ஸ ரன் அஸ்வனு' என்ற பெயரில் இடம்பெற்றது.
மாவட்ட இலக்கியப் போட்டிகளில் பாடசாலை மற்றும் திறந்த பிரிவுகளில் பங்குபற்றி, வெற்றி பெற்றவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மொனராகலை மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பசன், எஸ்.பி. ரத்நாயக்க, ஆகியோரின் தலைமையில், இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு மொனராகலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஹர்ஷனி மீகஹதேனி உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
மொனராகலை மாவட்ட இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 11, 2024
Rating:

கருத்துகள் இல்லை: