காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் யாப்பு திருத்தம் ஒரு கண்துடைப்பா ?
(தொடர் 1)
நமது ஊரின் அடையாளமான பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன யாப்பு திருத்தம் நீண்ட இழுபறிகளின் பின்னர் அதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டு இரண்டு அமர்வுகள் நடந்திருப்பதாக அறிய கிடைக்கிறது.
சம்மேளனத்தின் யாப்பு திருத்தப்பட வேண்டுமென அடிக்கடி குரல் கொடுத்து வந்தவன் நான் , அத்துடன்
யாப்பு திருத்த பிரேரணை ஒன்றையும் சம்மேளன பொதுச்சபை கூட்டத்திற்கு முன்மொழிந்து இருந்தேன்.
இருந்தாலும் என்னில் காழ்ப்புணர்வு கொண்ட சில சம்மேளன உறுப்பினர்கள் அப்பிரேரணையை கணக்கெடுக்காமல் நிராகரித்தனர்.
பின்னர் தொடர்ந்தேச்சியாக எனது முகநூல் பக்கத்தில் சம்மேளன யாப்பு திருத்தம் தொடர்பில் எழுதினேன்.
இப்போது நியமிககப்பட்டுள்ள யாப்பு திருத்த குழு ஒரு குறுகிய நோக்கம் கொண்ட அமைப்பில் செயற்படுவதாக சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
1985 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சம்மேளன யாப்பு
அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப உருவாக்க பட்டது.
இப்போது சமூகம் வளர்ந்திருக்கும் நிலையில் அந்த யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது மிக அவசியம்.
யாப்பு திருத்தங்கள் செய்வதற்கு நிபுணர் குழுவே நியமிக்கப்படுவர்.
யாப்பு திருத்தங்களுக்கு அரசறிவியல் அறிவு ஞானம் உள்ளவர்களே மிகவும் தகுதியானவர்கள்.
பல்கலைக்கழகங்களில் அரச அறிவியல் பாடத்தை ஒரு பாடமாகக் கொண்ட பட்டதாரிகள் அல்லது அத்துறை சார்ந்த அரசியல் யாப்பு நிபுணர்களே யாப்பை எழுத தகுதியானவர்கள்.
தற்போதைய சம்மேளன யாப்பு திருத்த குழுவில் ஓரிரண்டு படித்தவர்களை தவிர மற்றவர்கள் அத்துறையில் அறிவுடையவர்கள் அல்ல என சம்மேளன முக்கிய பிரமுகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாம் குடியரசு யாப்பு எழுதுகின்ற போது அரசியல் யாப்பு நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணியும் மிகப்பெரும் புத்தி ஜீவியுமான கொல்வின் R D சில்வா செயல்பட்டார்.
இரண்டாம் குடியரசு யாப்பை முன்னாள் ஜனாதிபதி கே ஆர் ஜெயவர்த்தன எழுத முயன்ற போது அதன் தலைவராக அரசியல் யாப்பு நிபுணர் சிரேஷ்ட சட்டத்தரணி சொக்ஸி நியமிக்கப்பட்டார்
சம்மேளன யாப்பு குழுவில் ஒரு நிபுணரை காட்டுங்கள் பார்ப்போம்
சிரேஷ்ட சட்டத்தரணியான உவைஸ் சம்மேளன சட்ட விவகாரங்களில் செயற்படும் நிலையில் அவரை கூட அக்குழுவில் நியமிக்கவில்லை.
குறித்த யாப்புக்குழு செய்துள்ள முக்கிய சிபாரிசுகளில் ஒன்றாக சம்மேளன தலைவர் தொடர்பில் பூர்வீகம் என்ற விடயம் புதிதாக முன்மொழிவு பட்டு இருப்பதாக அறியக் கிடைக்கிறது.
சம்மேளனத்தின் தலைவர் தொடர்பில் அவர் காத்தான்குடியை பூர்வீகமாகக் பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும் என்ற ஒரு விதி உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு சட்டத்தரணி , உலமாக்கள் உள்ளிட்ட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனை யாப்பு குழுவின் மூன்று உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து பிடிவாதமாக இருப்பதாகவும் மற்றும் ஒரு முக்கிய பிரமுகர் என்னிடம் தெரிவித்தார்.
தலைவருக்கு மாத்திரம் பூர்வீகம் என்று திருத்தம் யாப்பில் கொண்டு வர முயற்சிப்பது குறித்த பள்ளிவாயல் ஒன்றில் இருந்து எதிர்காலத்தில் காத்தான்குடியில் பிறக்காத ஒருவர் தலைவராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவரோடு காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு யாப்புக்குழு உறுப்பினரே அதில் பிடிவாதமாக இருப்பதாக மேலும் அப்பிரமுகர் என்னிடத்தில் தெரிவித்தார்.
இவர்களுக்கு வெளியூரில் வாக்கு வேண்டும்
இவர்களுக்கு வெளியூரில் தொழில் செய்ய வேண்டும் ஆனால் சம்மேளனகத்துக்கு மாத்திரம் காத்தான்குடியில் வசிக்கும் ஒரு வெளியூரான் தலைவராக வந்து விடக்கூடாது?
என்ன ஒரு குறுகிய மனப்பாங்கு...
இக்குறுகிய மனப்பாங்கு முழு காத்தான்குடிக்கும் உரியது அல்ல
வெறும் மூன்று ஊர் வாதம் கொண்ட முரட்டுக்காரர்கள் மூன்று பேரின் நிலைப்பாடு
இந்நிலைப்பாடு முழு ஊரையும் கேவலப்படுத்திவிடும்.
சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்களே
பொதுச்சபை உறுப்பினர்களே இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?
ஊரின் மானம் காற்றில் பறக்க அனுமதிப்பீர்களா?
தாங்கள் நினைத்த மாதிரி சம்மேளனத்தின் யாப்பை திருத்த இக்குழு முயற்சிப்பது சம்மேளனம் இவர்களின் உம்மா வீட்டு சொத்தா?
ஊரின் முக்கிய தலைவர்கள் பலரும் சம்மேளனத்தின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.
நானும் முப்பது வருடங்களுக்கு மேல் சம்மேளனத்தின் வெற்றிக்கு பணியாற்றி உள்ளேன் இவ்வாறு பலரும் செய்த பங்களிப்புகள் தான் சம்மேளனத்தை இன்று உலக ரீதியாக பேசும் நிலைக்கு மாற்றி இருக்கிறது.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
அன்புடன்
யு.எல்.எம்.என். முபீன்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் யாப்பு திருத்தம் ஒரு கண்துடைப்பா ?
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 13, 2025
Rating:

கருத்துகள் இல்லை: