• Home
  • About Us
  • Contact Us
lankanvoice Media Network

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home political “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

www.lankanvoice.lk பிப்ரவரி 02, 2025 political

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

(29) முற்பகல் நாராயன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான இட ஒதுக்கீடு, பிரதேச சபைகளின் எதிர்கால அபிவிருத்தி திட்டம், சமூக வலுவூட்டல் திட்டங்கள் மற்றும் “Clean Sri lanka” திட்டத்தை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. 

மகரகம மற்றும் கஸ்பாவ எல்லைகளில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளிற்கு தீர்வு காணல், கொழும்பு பிரதான பஸ்தரிப்பிடத்தில் உள்ள அசுத்தமான தன்மையை உடனடியாக நீக்குதல் மற்றும் சீத்தாவக்கை நிரிபொல வயல் நிலங்களில் பாதுகாப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுவதனை நிறுத்துதல் உட்பட்ட காரணங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

“மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்த பிரச்சனைகள் காரணமாக எதிர்பார்த்த மாற்றத்திற்காக கடந்த தேர்தலின் போது அவர்கள் வாக்குகளை பயன்படுத்தினர். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்காக நடவடிக்கைகளை மேற் கொள்ள அரசாங்கம் என்றவகையில் எங்களிற்கு பொறுப்பு இருக்கின்றது. 

Clean Sri Lanka திட்டம் என்பது சுற்றுச் சூழலை சுத்தம் செய்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல், அல்லது கொள்கைகளை செயற்படுத்துவது மட்டுமல்ல, நடத்தை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் நற் பண்புகளை ஏற்படுத்தவும் வேண்டும். 

Clean Sri Lanka ஊடாக எதிர்பார்க்கப்படுவது அனைத்து பிரிவுகளிலும் மறுசீரமைப்பினை ஏற்படுதுதல் ஆகும். அதற்காக மக்களிற்கிடையில் உரையாடல்கள் ஏற்பட வேண்டும். 

நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் என்ன என்பது பற்றி நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மக்களிற்கு தரமான சேவையை உணர்வுபூர்வமாக வழங்குங்கள். சேவைகள் பற்றி மக்கள் திருப்தியடைவதே முக்கியமானது. இது சுற்று நிருபங்களை வெளியிட்டு செயற்படுத்த வேண்டிய ஒன்று அல்ல” என பிரதமர் மேலும் கருத்து தெரிவித்தார்.

பிரதமரின் ஊடக பிரிவு


“Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 02, 2025 Rating: 5

Tags :

political
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

political

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Since 2021

Flag Counter

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • කාත්තාන්කුඩිය පිලිබද මහාචාර්ය මැදගොඩ අබේතිස්ස හිමිපානන්ගේ ප්‍රකාශයට කාත්තාන්කුඩි නගර සභාව ඇතුළු සංවිධාන දැඩි විරෝධය
    කාත්තාන්කුඩි ප්‍රදේශයේ ඉස්ලාමීය ශරියා නීතිය අනුව 20 දෙනෙකුට මරණ දඩුවම් ලබාදි ඇති බවටත් වහාබ් ත්‍රස්තවාදය අපගේ මාතෘ භූමියෙන් තුරන්කර...
  • காத்தான்குடி அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டினில் சேவை நலன் பாராட்டு
    ஏ.எல்.டீன் பைரூஸ் காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இன்று (7.7.2019) ஓய்வு பெறும் தேசமாணிய, தேசகீர்த்தி எம்.ஏ.சீ.எம...
  • "இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்
    தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த ...
  • புத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்திலும் முதலாம் இடம்
    எமது பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் M.F. Izzath Shafa என்ற மாணவி கடந்த 03.11.2022 அன்று நடைபெற்ற வலய மட்ட புத்தாக்க போட்டியில் கலந்து...

Recent Posts

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்டனர். அவர்கள் ஜூன் 27 வரை இலங்கையில் தங்கியிருப்...

Interested

  • இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.
    சிரேஷ்ட சட்டத்தரணி  MIM.அஸ்வர்  எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...
  • இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
    இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...
  • ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை
    (பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
    நடைபெற  இருக்கின்ற பாராளுமன்றத்  தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...
All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.