Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு தலைவரும் அரசியலைமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் (19) திங்கட்கிழமை பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.



இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட  மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் தங்களது காத்திரமான கருத்துக்களையும் இதன் போது வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் Reviewed by www.lankanvoice.lk on மே 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.