காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு..
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு "இதயம்" செயற்திட்டத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான "மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இரண்டாவது இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (25) காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் இதயம் செயற்றிட்ட தலைவர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் ஸ்கை தமிழ் செய்தி உதவி முகாமையாளர் சிம்ரா நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மஹ்ஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்,கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலைபொது முகாமையாளர் ஏ.எஸ்.ஏ. இஸ்ஸதீன், தாதிய உத்தியோகத்தர் வளவாளர் அனிதா அற்புதராஜா மற்றும் அவதானி ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் மதியன்பன் மஜீத், அஷ்ஷேய்க் முனீர், ஊடகவியலாளர் உமர் அரபாத் , ஏறாவூர் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர் ஐ.எம்.அம்ஜத் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் ஏற்பாடு செய்ததுடன் ஏறாவூர் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் மார்பக புற்றுநோய் தடுப்புப் பிரிவு ஒழுங்கமைத்திருந்தது.
காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு..
Reviewed by www.lankanvoice.lk
on
மே 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: