காத்தான்குடியில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு.
(எம்.பஹத் ஜுனைட்)
போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் புதிய காத்தான்குடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு சனிக்கிழமை (31) வங்கி முன்றலில் நடைபெற்றது.
வங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மஹ்ஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் வங்கி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி, சமூதாம் சார் சீர் திருத்த உத்தியோகத்தர் எம்.எம்.ரஸூல் ஷா ஆகியோர் கலந்துகொண்டதுடன் மெளலவி எம்.எச்.எம்.ஜிப்ரி(மதனி) ஆன்மீக உரை நிகழ்த்தினார்.
காத்தான்குடியில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 01, 2025
Rating:

கருத்துகள் இல்லை: