சிறப்பாக நடைபெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் 25வது வருட விழாவும் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும்..
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி மீடியா போரத்தின் 25 வது ஆண்டு விழாவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலும் சனிக்கிழமை (14) காத்தான்குடி ஸஹா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் விஷேட அதிதியாகவும், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்.மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ஊடகவியலாளர் சிவம் பாகியநாதன்,காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா தலைவர் எம்.ஐ.அப்துல் கபூர்(மதனி) ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர் எஸ்.ஏ.கே.பழீலுர்ரஹ்மான் கெளரவிக்கப்பட்டதுடன் காத்தான்குடி மீடியா போரத்தின் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் முயற்சியினால் உருவாகிய காத்தான்குடி மீடியா போரத்தில் ஆரம்ப கால உறுப்பினர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.ஏ.மஜீத்(மதியன்பன்), ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அன்சார்,ஆர்.ரீ.எம்.அனஸ்,ஐ.ஆதம்லெப்பை, மர்ஹும் ஏ.எச்.முஹம்மது, மர்ஹும் ஏ.எல்.எம்.பழுல்லாஹ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
25 வருடங்கள் ஊடக சமூக பணியாற்றிவரும் காத்தான்குடி மீடியா போரத்தின் சிறப்பு நிகழ்வில் ஊடக துறையில் முக்கிய பொறுப்புக்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக நடைபெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் 25வது வருட விழாவும் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும்..
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: