ஊடகவியலாளர் சஜீக்கு விருது.
( எம். பஹத் ஜூனைட்)
ஒளிபரப்பாளரும், ஊடகவியலாளரும்,சமூக செயற்பாட்டாளாருமான எம்.எஸ்.எம். சஜீ ஊடகத்துறையில் 25 வருட காலமாக கடமையாற்றி வருகிறார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் ஊடகக் கல்வியை கற்று நிறைவு செய்து வெளியேறி அவர் ஊடகத்தை மக்களுக்காக பயன்படுத்தி வறியோறுக்கும் விசேட தேவையுடையோரின் வாழ்வுக்கும் ஒளியூட்டி வழிகாட்டியமைக்காக தலை நகரில் பாராட்டி விருதும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.
சிலோன் ஓபன் கெம்பஸ் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (10) மாலை இடம் பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கும் விருதும் பாராட்டும் வழங்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர் சஜீக்கு விருது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 10, 2025
Rating:

கருத்துகள் இல்லை: