Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வரிமூலம் இந்தியா, சீனாவை அடிபணிய வைக்க முடியாது: ரஷ்ய ஜனாதிபதி!

வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும் ராணுவ பேரணியில் பங்கேற்றதற்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த புதின் மேற்கண்டவாறு கூறினார்.

“ வரிகள் அதிகரிப்பு, வர்த்தக தடைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் ஆசியாவில் வலிமை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவை மிரட்டி பணியவைக்க முடியாது. காலனித்துவ சகாப்தம் இப்போது முடிந்துவிட்டது.

எனவே இந்த வழிமுறையை பின்பற்றி அமெரிக்கா தங்களது கூட்டாண்மை நாடுகளுடன் பேச முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் பொருளாதார அழுத்தங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை பணியவைக்கும் வேலையில் ஈடுபடுகிறது.

அதிக வரிகளை விதிப்பதன் மூலம் இந்த நாடுகளின் தலைமையை பலவீனமாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சொந்த உள்நாட்டு அரசியல் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.
நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது அந்த பெரிய நாடுகளின் தலைமை எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும். இதனை அமெரிக்கா சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விரைவில் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை சகஜ நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் புதின் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த ஆண்டு இந்தியாவுக்கான உர விநியோ கத்தை அதிகரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

வரிமூலம் இந்தியா, சீனாவை அடிபணிய வைக்க முடியாது: ரஷ்ய ஜனாதிபதி! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.