வரிமூலம் இந்தியா, சீனாவை அடிபணிய வைக்க முடியாது: ரஷ்ய ஜனாதிபதி!
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும் ராணுவ பேரணியில் பங்கேற்றதற்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த புதின் மேற்கண்டவாறு கூறினார்.
“ வரிகள் அதிகரிப்பு, வர்த்தக தடைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் ஆசியாவில் வலிமை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவை மிரட்டி பணியவைக்க முடியாது. காலனித்துவ சகாப்தம் இப்போது முடிந்துவிட்டது.
எனவே இந்த வழிமுறையை பின்பற்றி அமெரிக்கா தங்களது கூட்டாண்மை நாடுகளுடன் பேச முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் பொருளாதார அழுத்தங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை பணியவைக்கும் வேலையில் ஈடுபடுகிறது.

கருத்துகள் இல்லை: