Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து அதிரடி சோதனை..!


B.M.பயாஸ் (ஊடகவியலாளர்)

காத்தான்குடி நகரப் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை ஆய்வு செய்யும் நோக்கில், சுகாதாரத் துறையினரால் இன்று மாலை விசேட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பில் அமைந்துள்ள சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேசத்துக்கு பொறுப்பான அலுவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதில் இரு பிராந்தியங்களையும் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) தீவிரமாக ஈடுபட்டனர். இதன்போது மனித நுகர்வுக்கு தகுதியற்ற, சுகாதார சீர்கேடான முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டன. 


குறிப்பாக, குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த உணவுப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது சுகாதார நடைமுறைகளை முறையாகப் பேணாத உணவகங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைப்பதற்கான ஆலோசனைகளும் கடுமையான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. 


அதேவேளை, மிகவும் மோசமான முறையில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 


பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சோதனைகள் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து அதிரடி சோதனை..! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 28, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.