காத்தான்குடி குபா மற்றும் சின்னப் பள்ளிவாயளில் திருட்டுச் சம்பவம்......
ஏ.எல்.டீன்.பைரூஸ்
காத்தான்குடி ஆற்றங்கரை குபா பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி சின்னப் பள்ளிவாயளில் திருட்டுச் சம்பவம் இடம் றெ்றுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நேரம் பார்த்து சின்னப் பள்ளிவாயனுல் நுழைந்த இனந்தெரியாதோர் அங்கிருந்த அம்புலிவயர் செட்டினை களவாடிச் சென்றுள்ளதாகவும் அதே போன்று காத்தான்குடி குபா பள்ளிவாயலில் இருந்து Water motor உட்பட இன்னும் சில பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
திருட்டுச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற் கொள்ள இரு பள்ளிவாயல்களிலும் CCTV கெமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் பள்ளிவாயல்களை இலக்கு வைத்து காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உரிய தரப்பினரின் பொறுப்பு என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நாட்டினில் இடம் பெற்று வரும் அசாதாரண நிலமையினை கவனத்தில் கொண்டு பாடசாலைகள், மஸ்ஜிதுகள், பொது நிருவனங்கள் என சகலவற்றிக்கும் CCTV கெமரா பொருத்துவது காலத்தின் தேவை என்பதனை கடந்த காலங்களில் பலரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி குபா மற்றும் சின்னப் பள்ளிவாயளில் திருட்டுச் சம்பவம்......
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 22, 2018
Rating:

கருத்துகள் இல்லை: