Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பதுரியா பாலர் பாடசாலையின் 29வது வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வு- 2018




(S. சஜீத்)
காத்தான்குடியில் மிகவும் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாக காணப்பட்டு வரும் பதுரியா பாலர் பாடசாலையின் 29வது வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன (21.12.2018 வெள்ளிக்கிழமை)   காத்தான்குடி பதுரியா மகளிர் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பதுரியா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றதோடு... இந்நிகழ்வுக்காக காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.ஏ லெத்தீப் (அலிசப்ரி) மற்றும் எம்.ஐ.எம் ஜவாஹிர் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்புப் பேச்சாளராக பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்க். நுஸ்ரி (நளீமி) அவர்கள் கலந்து கொண்டு பாலர்களை சமூகத்திற்கு பணி செய்யக்கூடிய குழந்தைகளாக வளர்த்தேடுப்பது எவ்வாறு என்ற தலைப்பில் சிறப்பு  பேச்சினையும் நிகழ்த்தினர். மேலும் பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என்று பலர் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் ஆசிரியர்கள் மூலம் சிறுவர்களுக்கு கலை நிகழ்வுகள் பயிற்றுவிக்கப்பட்டு  நடைபெற்றன.



இவ் குறித்த பாலர் பாடசாலையானது கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பதுரியா விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஆரம்பம் செய்யப்பட்டு இன்று வரை எவ்விதமான தங்கு தடையுமின்றி மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்று  அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் திறன் பட செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வின் போது சென்ற வருடங்களில்  பாலர் வகுப்பில் கல்வி பயின்று இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


காத்தான்குடி பதுரியா பாலர் பாடசாலையின் 29வது வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வு- 2018 Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 22, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.