காத்தநகர் முகைதீன் சாலியின் ' சிவப்புக்கிரக மனிதன்' நூல் வெளியீட்டு விழா
காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் ஒத்தாப்பு கலை இலக்கியப் பெருவெளி இணைந்து நடாத்தும் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடான கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலியின் ' சிவப்புக்கிரக மனிதன்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 15.09.2019 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.45 மணிக்கு கவிமணி எம்.எச்.எம். புஹாரி பலாஹி தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொள்வதோடு முதற் பிரதிகளை தேசமான்ய ஏ.எல். மீராசாகிபு மற்றும் தேசபந்து கே.எம்..எம். கலீல் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
காத்தநகர் முகைதீன் சாலியின் ' சிவப்புக்கிரக மனிதன்' நூல் வெளியீட்டு விழா
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 09, 2019
Rating:

கருத்துகள் இல்லை: