Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு ஜனாதிபதி செயலணிக்கு


புதிய பொருளாதார மாதிரி வடிவமைப்பு; கடனுக்குப் பதில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை; சுற்றுலா ஊக்குவிப்பு பல்வேறு வழிகளில்; கல்விக்காக நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி வெளிச் செல்வதை குறைத்தல்; உள்நாட்டில் மருந்துப்பொருள் உற்பத்தி - பொருளாதார அபிவிருத்தி ஜனாதிபதி செயலணிக்குப் பணிகள்!

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சி யடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, புதிய பொருளாதார மாதிரி யொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு - பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதி வாரியாகப் பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதாரத் திட்டங்களைத் தயாரித்து செயலணி நடைமுறைப்படுத்த வேண்டும் என நான் அறிவுறுத்தியுள்ளேன்.

மே 11ஆம் திகதி முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் நாட்டின் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் -ஜனாதிபதி செயலணியுடன் நேற்று பிற்பகல் சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே நான் இதனைத் தெரிவித்தேன்

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை புதிய வடிவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும்;

கொவிட் 19 வைரஸை ஒழித்து எழுந்துள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும்;

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தீர்க்க வாய்ப்புகள் உள்ளன என்றும்;

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதாரச் சான்றிதழுடன் உள்நுழைவு அனுமதிகளை வழங்கி, அதிகம் செலவிடக்கூடிய இயலுமையுள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர திட்டமிட வேண்டும் என்றும்;

சில நாடுகளில் சுற்றுலா பயணிகள் குளிர் காலத்தில் நீண்ட காலத்திற்கு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அத்தகைய சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றுலா கைத்தொழிலை விரைவாக கட்டியெழுப்ப முடியும் எனவும் நான் சுட்டிக்காட்டினேன்.

சுதேச சுற்றுலா வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி - தங்குவிடுதி விருந்தோம்பல் தொழிற்துறையைப் பாதுகாக்கக் கூடிய வாய்ப்புகள் குறித்து நாம் ஆராய்ந்தோம்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்குள்ள வாய்ப்புகள் குறித்தும் நான் நினைவூட்டினேன்.

வெளிநாட்டு கடனுக்கு பதிலாக முதலீட்டு வாய்ப்புகளுக்கு திட்டமிடும் பொறுப்பு அமைச்சுக்களின்்செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகப் பல புதிய ஆக்கங்கள் நாட்டில் உருவாகியுள்ளன. அவற்றை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தி புதிய உற்பத்திகளை ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

என்னால் முன்வைக்கப்பட்ட நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் புதிய தொலை நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணிக்குப் பலம் உள்ளதாக அதன் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

புதிய வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும், தற்போது இயங்குகின்ற - பாரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வர்த்தகங்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவியை பெற்றுக்கொடுக்க தனது செயலணி தலையிடும் என்றும் பசில் ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மே 11 முதல் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதும், தொழிற்துறை நடவடிக்கைகளைத் தத்தமது தேவைக்கு அமைய நிறுவனங்கள் நடத்திச் செல்ல முடியும்.

அரச அல்லது தனியார் துறை தொழிலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் தொழில் வாய்ப்புகள் தவறிப்போக இடமளிக்காது நாட்டை முன்கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உயர் கல்விக்காக மாணவர்கள் பெருமளவில் உலகின் பல நாடுகளுக்கும் சென்றுள்ளமை - நாட்டுக்குத் திரும்ப வருகை தருவதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்றும்;

இந்த மாணவர்கள் மூலம் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் அந்நியச் செலாவணி மிக அதிகமாகும் என்றும்;

எனவே, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்கி, வெளிச்செல்லும் பணத்தை நாட்டிலேயே வைத்திருப்பதற்கான வாய்ப்புகளோடு,

வெளிநாட்டு மாணவர்களைக் கலவிக்காக எமது நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை நாம் சம்பாதிக்க முடியும் என்றும் நான் சுட்டிக்காட்டினேன்.

ஓவ்வொரு வருடமும் மருந்துப்பொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மருந்துகளை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான பின்புலத்தை விரைந்து தயாரிக்கும் பொறுப்பும் ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறைக்குத் தேவையான பல விதை வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் நேற்றைய இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு ஜனாதிபதி செயலணிக்கு Reviewed by www.lankanvoice.lk on மே 07, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.