Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

21/4 தாக்குதலின் பின்னணியில் இந்தியாவா? – ரணில் வெளியிட்டுள்ள தகவல்!

21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருந்திருக்காது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா உள்ளது எனவும், தாக்குதலை ‘றோ’ அமைப்பே வழிநடத்தியது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”2019 ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியவால் புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. கடைசி இரு நாட்களில்கூட எச்சரிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யமுடியாமல்போனதையிட்டுதான் நாம் கவலையடைகின்றோம்.

தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளது என்பதற்கான தகவல் எதுவும் இல்லை. புலனாய்வு அமைப்புகளும் அது தொடர்பில் தகவல் வழங்கவில்லை.

அதேவேளை சாரா என்பது யாரென தெரியாது. அவர் ஊடாக தகவல் சென்றிருக்ககூடும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் மூன்றாம் தரப்பொன்றுக்குகூறி அதன் ஊடாக தகவல் சென்றிருக்ககூடும். 

சாரா ‘றோ’ உளவாளியா என்பது குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் ஊடாகவே தகவல் சென்றிருக்ககூடும் என நம்பப்படுகின்றது. நேரடியாக சென்றதா அல்லது மூன்றாம் தரப்பு ஊடாக சென்றதா என்பது தெரியாது.” – என்றார்.
  

21/4 தாக்குதலின் பின்னணியில் இந்தியாவா? – ரணில் வெளியிட்டுள்ள தகவல்! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 09, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.