சமய மற்றும் கலாசார உரிமைகளில் கை வைப்பது அச்சமயம் சார்ந்தவர்களின் உயிரை பறிப்பதற்கு சமமானது.
சமய மற்றும் கலாசாரம், உரிமைகளில் கை வைப்பது அச்சமயம் சார்ந்தவர்களின் உயிரை பறிப்பதற்கு சமமானது என சிரேஷ்ட சட்டத்தரணி MIM. அஸ்வர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்......
ஒவ்வொருவரும் தத்தமது சமயத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்குரிய உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியல் அமைப்பு வழங்கியுள்ளதுடன் சர்வதேச மனித உரிமைகள் சாதனங்களிலும் அதே அளவில் வலியுறுத்தப் பட்டுள்ளன.
எமது நாட்டின் அரசியல் அமைப்பில் உறுப்புரை 10ன் ஊடாக சமய கலாசாரம் உரிமைகளை வலியுறுத்தியும் அவ்வுரிமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்டவோ இடைநிறுத்தப்படவோ இல்லாமல் செய்யப்படவோ முடியாதவாறு அரசியல் அமைப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் அமைப்பின் உறுப்புரை 10ல் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளுக்கான மட்டுப்பாடுகள் உறுப்புரை 15ல் சொல்லப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சமய மற்றும் கலாசார உரிமைகளில் கை வைப்பது அச்சமயம் சார்ந்தவர்களின் உயிரை பறிப்பதற்கு சமமானது.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 19, 2021
Rating:

கருத்துகள் இல்லை: