காலத்தின் தேவை கிண்ணியா கல்வி வலையத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் சிந்தைதனைக்கமைய கிண்ணியா கல்வி வலையத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றில் அவசியம் குறித்து ஆலோசனை.
கிண்ணியா வலயத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை அமைக்கப்படுவதன் முக்கியதத்துவம் குறித்து ஆராயப்பட்டது.
பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில் எமது பிரதேச மாணவர்களும் பல துறைகளிலும் அனைத்து இன மக்களோடும் இணைந்து பணியாற்றுவது காலத்தின் தேவை என இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா கல்வி வலையத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றை அமைப்பதன் முக்கியத்துவம் பற்றிய முதலாவது ஆலோசனைக் கூட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் கிண்ணியா நகரபிதா நளீம்,கிண்ணியா ஜமிய்யதுல் உலமாசபை தலைவர்,மௌலவிA.M.ஹிதாயத்துல்லா, சூறா சபை தலைவர்,ஓய்வுபெற்ற அதிபர்.A.R.M.பரீட்/சில்க்ஸ் ஓய்வு பெற்ற அதிபர்களான S.M.பாரூக்/ A.S.ஜுனைதீன் ஓய்வுபெற்ற, ஆசிரிய ஆலோசகர் A.S.M.மஹ்ரூப் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் மேற்படி விடயம் தொடர்பிலான முக்கிய ஆலோசனைகளும் எடுக்கப்பட்டுளதாக தெரிவித்தனர்.
காலத்தின் தேவை கிண்ணியா கல்வி வலையத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2021
Rating:

கருத்துகள் இல்லை: