சமுர்த்தி சௌபாக்யா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு
(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சௌபாக்யா வீடுகள் கைளிக்கும் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் யூ. உதய சிரீதர் தலைமையில் நேற்று 06.03.2021 இடம்பெற்றது.
கிராம சேவக பிரிவுகளான 167A, 167B,167D ஆகிய பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் நால்வருக்கு இவ்வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சில்மியா சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ. எல். ஸெட். பஹ்மி பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
ஒரு வீட்டிற்கான பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாயாகும் மிகுதி பணம் பயனாளியின் பங்களிப்பில் பூரத்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி சௌபாக்யா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2021
Rating:

கருத்துகள் இல்லை: